நெடுஞ்சாலைத்துறை  பொறியாளர்கள்  ஆர்ப்பாட்டம்

அதிகாரிகளுக்கு எதிரான சாலைப் பணியாளர்களின் செயல்பாட்டைக் கண்டித்து, புதுகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்

அதிகாரிகளுக்கு எதிரான சாலைப் பணியாளர்களின் செயல்பாட்டைக் கண்டித்து, புதுகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருக்கோகர்ணத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச்செயலாளர் தங்கராஜா தலைமை வகித்தார்.இதில், நெடுஞ்சாலைத் துறையையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக களங்கப்படுத்தும் வகையில் செயல்படும்  சாலை பணியாளர்கள் சங்க நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.  இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்புச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com