கந்தர்வகோட்டையில் தழிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்டார பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் பழனிமலை தலைமை வகித்தார். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பையா, செயலாளர் செல்லையா, முன்னாள் மாவட்டப் பொருளாளர் பெரியசாமி, பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கந்தர்வகோட்டை வட்டார சங்கத்தின் புதிய தலைவராக பழனிமலையும், செயலராக நெடுஞ்செழியன், பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரா. துரை நன்றி கூறினார்.