புதுகை நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.60 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். 

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.60 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். 
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பிரகதாம்பாள் நகரில் எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்தும் பணி, கோவில்பட்டி காலனியில் ரூ.60 லட்சம் மதிப்பில் நடைபெறும் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம்.சரயு, நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com