வேந்தன்பட்டி கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிளைநூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிளைநூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் வி.என்.அண்ணாமலை தலைமை வகித்தார். நூலகர் துரைராஜ் வரவேற்றார். புரவலராக இணைந்த வார்ப்பட்டு ஊராட்சி செயலர் சி.சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நூலகர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனையின் பேரில் மாணவ உறுப்பினர்களாக இணைந்த 20  பேருக்கு நூல்கள் வழங்கப்பட்டன.  வாசகர்கள் அருணாச்சலம், சுப்பு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாசகர் வட்ட நிர்வாகி அ.கருப்பையா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com