அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் மதன்குமார் தலைமை வகித்தார்.  அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், ஆள்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சங்கத்தின் மாவட்டத்  தலைவர்  நாகராஜன், செயலாளர்  ரெங்கசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com