ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ள மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் சேவை பெறலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய செயற் பொறியாளர் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குடி, கறம்பக்குடி வட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் விவசாய மின் மோட்டார் இணைப்பு, வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற அறந்தாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது.கடந்த 2017 அக்.19ஆம் தேதி அறந்தாங்கியிலிருந்து ஆலங்குடி பிரிக்கப்பட்டு தனி கோட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்காக ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை துணைமின் நிலைய வளாகத்தில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.