அறந்தாங்கி வர்த்தக சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி ரோட்டரி அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் விஜயா துரைராஜ் தலைமை வகித்தார்.
வர்த்தக சங்கத்தின் புதிய தலைவர் பா.வரதராஜன், செயலாளர் வி.ஜி.செந்தில்குமார், பொருளாளர் எஸ்.சலீம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பேசினார். முன்னாள் வர்த்தக சங்க தலைவர் நா.சந்திரமோகன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.கார்த்திகேயன், துணை ஆளுநர் எஸ்.தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரோட்டரி கிளப் செயலாளர் அ.ரவிசங்கர் வரவேற்றார் நிறைவில் பொருளாளர் அ.ஆனந்தராஜன் நன்றி கூறினார்.வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் வருகிற 2021ஆம் ஆண்டு வரை அவரவர் பொறுப்புகளில் செயல்படுவர்.