புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் தல. சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சுப் பணியாளர்களுக்கும் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் , அலுவலக மேலாளர் பணி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை கைவிட வேண்டும்.
ஆய்வக உதவியாளர்களை பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.