நரிமேட்டில் அடுக்குமாடி கட்டுமானப்பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி நரிமேட்டில் கட்டப்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி

புதுக்கோட்டை நகராட்சி நரிமேட்டில் கட்டப்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட நரிமேட்டில் ரூ. 150 கோடியில்  1920 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
ஆய்வின்போது, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத் தலைமைப் பொறியாளர் சுப்பிரமணி, மேற்பார்வைப் பொறியாளர் சேதுபதி, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com