பொன்னமராவதி அருகே ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்குப் பதியப்பட்டன.
பொன்னமராவதி அருகே காரையூர் மருதம்பட்டியில் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற கிராமமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனர். ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்யும் போது சிதம்பரம் என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்தாராம். இதுகுறித்து காரையூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.