புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுகையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுதாகார நிலைய மருந்தாளுநர்களைப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும்.
மருந்து கிடங்கு அலுவலர்களின் ஊதிய முரன்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.