புதுக்கோட்டை அருகேயுள்ள புதுப்பட்டையைச் சேர்ந்தவர் வீரமுத்து. விராலிமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிவந்த இவர், கடந்த மாதம் ஒழுங்கீன நடவடிக்கையால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இவர், முள்ளூர் பகுதியில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சுமை ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த வீரமுத்து புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.