தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேசுவரர் கோயிலில் கிங்ஸ் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உழவாரப் பணி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெ. அற்புத விஜயசெல்வி தலைமை வகித்தார். நிகழ்ச்சியைக் கல்லூரிச் செயலர் உரு. ராசேந்திரன் தொடக்கி வைத்தார். இதில் கோயில் வளாகம், திருக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணாமலை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சி. அம்பலத்தரசு, பா. ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.