பட்டீஸ்வரத்தில் அம்மா திட்ட முகாம்

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் ஊராட்சியில் அம்மா திட்டமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 175 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் ஊராட்சியில் அம்மா திட்டமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 175 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமிற்கு வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சோழபுரம் அறிவழகன், சமூக பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பட்டீஸ்வரம் ஊராட்சி செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட பிரிவு செயலாளர்கள் பாண்டியன், கோவி.ரமணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தனலெட்சுமி ஜீவா மற்றும் ஜீவா, வாசுதேவன், திராவிடமணி, வழக்குரைஞர் புகழேந்தி, மண்டல துணை வட்டாட்சியர் சண்முகம், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200 மனுக்கள் பெறப்பட்டதில் 175 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. எஞ்சிய மனுக்கள் அந்தந்த துறையின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com