சுகாதார வாரவிழா போட்டி: வென்றோருக்குப் பரிசளிப்பு

சுகாதார வாரவிழாவையொட்டி பேராவூரணி வட்டார அளவில் திறந்தவெளி கழிப்பிடமற்ற இந்தியா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில்

சுகாதார வாரவிழாவையொட்டி பேராவூரணி வட்டார அளவில் திறந்தவெளி கழிப்பிடமற்ற இந்தியா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த. குமரவடிவேல், இரா. சித்ரா ஆகியோர் தலைமை வகித்துப் பரிசு வழங்கினர்.  
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பேச்சுப்போட்டியில்  பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சி. ரேணுகா, துலுக்கவிடுதி வடக்கு நடுநிலைப்பள்ளி மாணவி மு. கயல்விழி, ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. கெளஷிகாஸ்ரீ ஆகியோர் முதல் 3 இடங்களையும் கட்டுரைப் போட்டியில் துலுக்கவிடுதி வடக்கு ஞா. சுகப்பிரியா, பெரியதெற்குக்காடு கோ. அருந்ததி, துலுக்கவிடுதி டி. பிரதீப் ஆகியோர் முதல் 3 இடங்களையும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பேச்சுப்போட்டியில் துலுக்கவிடுதி வடக்கு எஸ்.ஆதவன், சி.புவனிகா, ரா.கார்த்திகா ஆகியோர் முதல் 3 இடங்களையும் ஓவியப்போட்டியில் ம. அஷ்மிதா முதல் பரிசையும் வென்றனர்.
 ஆசிரியர்கள் செ. ராமநாதன், தமிழரசன், அமுதா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  வட்டார ஒருங்கிணைப்பாளர் யோகேஷ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com