அச்சுறுத்தும் கதண்டுகளை அகற்ற கோரிக்கை

பாபநாசம் அருகே தனியாருக்கு சொந்தமான மரத்தில் அதிக அளவில் கூடுகட்டி, அச்சுறுத்தலாக உள்ள விஷ கதண்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் அருகே தனியாருக்கு சொந்தமான மரத்தில் அதிக அளவில் கூடுகட்டி, அச்சுறுத்தலாக உள்ள விஷ கதண்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தை அடுத்த திருவைகாவூர்  ஊராட்சி, அதியம்பநல்லூர் கிராமம், பிள்ளையார் கோவில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான ஒரு மாமரத்தில் கதண்டு எனும் விஷ வண்டுகள் அதிக அளவில்
கூடுகட்டி உள்ளன. இதனால், இந்த வழியே பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று, வருகின்றனர். ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்னர், விஷ கதண்டுகளை அகற்ற தீயணைப்புத் துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com