அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

பட்டுக்கோட்டையில் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி தலைமை அஞ்சலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது

பட்டுக்கோட்டையில் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி தலைமை அஞ்சலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு புதன்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 திமுக சார்பில் நகர பொறுப்பாளர் என்.ஆர்.என்.செந்தில்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் ந.மணிமுத்து, வழக்குரைஞர் எம்.செல்வராஜ், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எம்.கே.செந்தில்முருகன்,
நா.ராமகிருஷ்ணன், எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
 தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிறுவனர், தலைவர் சதா.சிவக்குமார் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் வீர.மகேந்திரன்,
ஒரத்தநாடு ஒன்றியச் செயலர் சின்னராஜா, மதுக்கூர் தமிழ்சேகுவரா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் அதன் பொதுச்செயலர் தங்க.குமரவேல் அம்பேத்கர் படத்துக்கு மாலை  அணிவித்தார். இதில், மா.நா.விடுதலை மறவன், கவிமுருகன், அமல்ராஜ், கோபி
உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில பொதுச்செயலர் வீ.சி.முருகையன் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் ஆர்.அமிர்தலிங்கம், பா.கைலாசம்,
வீர.செந்தில்நாதன், ரா.ராஜேந்திரன், செல்ல.மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில், அம்பேத்கர் சிலைக்கு எஸ்.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்
கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமுஎகச மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முருக.சரவணன், மோரிஸ் அண்ணாதுரை, கே.அண்ணாதுரை,
கண.எழில்,  பசுபதி, கோ.ஆறுமுகம், பன்னீர்செல்வம், குலோத்துங்கன், என்.கந்தசாமி, எஸ்.கே.பாலகிருஷ்ணன், குட்டி, சுரேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில்... அம்பேத்கரின் 61- ஆவது நினைவுதினத்தையொட்டி, பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப.பாலசுந்தரம், சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் வெங்கடேசன், ஆறு.நீலகண்டன், ஆயர் த.ஜேம்ஸ், ஜீவானந்தம், தா.கலைச்செல்வன், பைங்கால் மதி உள்பட பலர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில்... பாபநாசம் ஒன்றிய, நகர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாபநாசம் கீழவீதி பழைய அண்ணாசிலை வளாகத்தில் அலங்கரித்து
வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் குணசேகரன் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
 இதில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் க.செல்லதுரை, மாவட்டக் குழு உறுப்பினர் சாமு.தர்மராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராசு, முருகானந்தம், தமிழ்செல்வன், பன்னீர்செல்வம்,
இளங்கோவன், ஜான், அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com