கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தஞ்சாவூரில் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 3 பேருக்கு நிகழ் பருவக் கட்டணமாக ரூ. 65 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
விழாவுக்கு பவுண்டேசன் தலைவர் ஏ.ஆர். சவரிமுத்து தலைமை வகித்துப் பேசுகையில், கல்வி உதவித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 571 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில் பவுண்டேசன் அறங்காவலர்கள் கோவிந்தராஜு, முரளிகிருஷ்ணன், சம்பத் ராகவன், திட்ட இயக்குநர் ரத்தீஸ் குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெர்சி, ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர் ரோசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com