செம்பாளூரில் பங்காரு அடிகளார் மணி விழா தோரண வாயில் திறப்பு

பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ரூ.6.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிறுவனர்

பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ரூ.6.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிறுவனர் பங்காரு அடிகளார் மணி விழா தோரண வாயில் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பி.எஸ்.வாசன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் முன்னிலை வகித்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் இலக்குமி பங்காரு அடிகளார் தோரண வாயிலை திறந்து வைத்தார். முன்னதாக, தோரண வாயிலுக்கு கலச வேள்வி பூஜையும், தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்றது.  ஏற்பாடுகளை இயக்க மாவட்டச் செயலர் வை.முத்துவேல், நிர்வாகிகள் குருநாதன், குபேந்திரன், சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், மாணிக்கவாசகம், பிரசாத், முத்தரசன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com