தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தார்.
திருவையாறு அருகே அம்மன்பேட்டை கள்ளர் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் கோபாலகிருஷ்ணன் (45). பால் வியாபாரி. இவர் திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் என்பவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து கொண்டு, அம்மன்பேட்டையிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது மோதியதில் கோபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார்.
அப்பகுதியில் இருந்தோர் இவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.