தஞ்சாவூர் வடக்கு வீதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி மழலையர் பள்ளியில் ஸ்ரீ சங்கர பக்த சபா சார்பில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோத்சவத்தையொட்டி, ருத்ர ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழா டிச. 4-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ரிக்வேத சம்ஹிதா பாராயணம், ஹோமம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதன்கிழமை சண்டி பாராயணம், நவாவரண பூஜை, ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், வியாழக்கிழமை ஹோமம், ஆராதனை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.