பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த வீரையன் மகன் முருகேசன் (38). நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டிலுள்ள பல்பு எரியாததால் அதை முருகேசன் சரி செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராமல் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகேசனின் மனைவி தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.