சாலை விபத்தில் தொழிலாளி சாவு

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனபால் மகன் விஜய் (20). பூண்டியில் உள்ள பற்றவைப்புத் தொழிலகத்தில் தொழிலாளியாக

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனபால் மகன் விஜய் (20). பூண்டியில் உள்ள பற்றவைப்புத் தொழிலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். புன்னைநல்லுர் மாரியம்மன் கோயில் அருகே வந்த இவர் மீது தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com