சிறுமியிடம் பாலியல் வல்லுறவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமியிடம் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறுமியிடம் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகேயுள்ள திருப்புறம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ. சரத்குமார் (23). இவர் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2015, ஜூன் 5-ம் தேதி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு ஏமாற்றினாராம். இதுகுறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து சரத்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com