தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம், நரம்பு உறை தேய்வு நோய், தண்டுவடக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெ ரிவித்திருப்பது: மாவட்டத்தில் முதுகுத் தண்டு வடம், நரம்பு உறை தேய்வு நோய், தண்டுவடக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.
விபத்து மற்றும் நோயால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகள் எளிதாகச் செல்லும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் சக்கர நாற்காலி தேவைப்படுவோர் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-16, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ விண்ணப்பித்து பயன் அடையலாம்.
மேலும் விவரங்களுக்கு 04362 - 236791.