ஒரத்தநாடு அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் செல்லும் வழியில் கல்யாணஓடை கால்வாய் அருகே இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்ற கோரி, மேல உளூர் பேருந்து நிலையத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியர் ஜானகிராமன், காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.