தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 64-வது கூட்டுறவு வார விழா தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, மரக்கன்றுகள் நடும் விழாவும், ரத்த தான முகாமும் நடைபெற்றன. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் எம். ஏகாம்பரம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் - மேலாண்மை இயக்குநர் எம். உமாமகேஸ்வரி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் - மேலாண்மை இயக்குநர் டி. ரமணிதேவி, துணைப் பதிவாளர்கள் சுபாஷினி, நாகராஜன், மாரியப்பன், மாரீஸ்வரன், அ. தயாள விநாயகன் அமுல்ராஜ், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.