தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக். 7, 21 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக். 7, 21-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்த முறையின் கீழ் தயார் செய்யப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்களும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.