சிட்டியூனியன்வங்கி சார்பில் திருவிடைமருதூர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.30 லட்சம் செலவில் கூடுதல்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.30 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறையை கட்டி கொடுத்தது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் நினைவாக ரூ. 30 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை இப்பள்ளிக்கு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வகுப்பறையை  திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.
சிட்டியூனியன் வங்கியின் பவுண்டேசன் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், இயக்குநர் ஆர். மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஆதீனம் கட்டளை விசாரணை சுந்தரமூர்த்தி தம்பிரான், அம்பலவாணன் தம்பிரான் சுவாமிகள், வங்கியின் தலைமை திட்ட அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணை பொது மேலாளர் எஸ்.ராஜம், ஆதீனக்கல்வி நிலையங்களின் தாளாளர் கேகே.சுப்பிரமணியன், மகாலிங்க சுவாமி கோயில் கண்காணிப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com