அனைத்து ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.13) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.13) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்தல், தெரிவு செய்யப்பட்ட பணிகள் பட்டியலை கிராமசபைக் கூட்டத்தில் வைத்தல் உள்ளிட்ட பொருள்கள் தொடர்பாக சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com