எல்.ஐ.சி. முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் எல்.ஐ.சி.கும்பகோணம் யூனிட் 1 கிளை அலுவலகம் சார்பில் எல்.ஐ.சி முகவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் எல்.ஐ.சி.கும்பகோணம் யூனிட் 1 கிளை அலுவலகம் சார்பில் எல்.ஐ.சி முகவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிளை மேலாளர் எஸ். புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். உதவி  கிளை மேலாளர் (வணிகம்) கஸ்தூரி விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,  தொடர்ந்து 18 முறை எம்.டி.ஆர்.டி. மன்ற முகவராக பணியாற்றி வரும் பெரம்பலூர் எல்.ஐ.சி. அலுவலக முன்னோடி முகவர் ஞானவேல் கலந்து கொண்டு பேசினார்.
இதில், பாபநாசம் கிளை மேலாளர் வெங்கடேசன், வளர்ச்சி அதிகாரிகள் செந்தில்வேல், ராஜசுந்தரம்,செந்தில்வேல், கார்த்திகேயன் மற்றும் முன்னோடி முகவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வளர்ச்சி அதிகாரி ஜெய்சங்கர் வரவேற்றார்.
முடிவில் வளர்ச்சி அதிகாரி வேலுமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com