பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பட்டுக்கோட்டையை அடுத்த செண்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சி. வினைத்தீர்த்தான் (65). இவர் மனைவி இங்கிலீஷ் மணி (60). வியாழக்கிழமை இரவு இருவரும் வீட்டு வாசல் கதவை உள்புறம் பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்து விட்டு தூங்கியுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் யாரோ மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து இங்கிலீஷ்மணி கழுத்திலிருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.