தஞ்சாவூர்
கும்பகோணத்தில் நாளை குடிநீர் நிறுத்தம்
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீர்செய்யும் விதமாகவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நீரேற்றம் நிறுத்தப்பட உள்ளதால் ஏப். 19 ஆம் தேதி ஒரு நாள் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.