காலமானார்: மா. கல்யாணசுந்தரதேவர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டைச் சேர்ந்த மா. கல்யாணசுந்தரதேவர் (78), தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (ஏப். 25) காலமானார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டைச் சேர்ந்த மா. கல்யாணசுந்தரதேவர் (78), தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (ஏப். 25) காலமானார்.
இவர் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவராகவும்,  திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், தம்பிக்கோட்டை கீழக்காடு ஊராட்சித் தலைவராகவும், அரசின் சார்பில் மதநல்லிணக்கக் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அவருக்கு எம்.கே. சேதுராமன், எம்.கே. செந்தில் ஆகிய இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இறுதிச் சடங்கு, தம்பிக்கோட்டை கீழக்காட்டில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com