பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.லட்சுமி காந்தன், வ. விவேகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உடனடியாக ரயில் சேவையை தொடங்க வேண்டும்.
பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை துரிதமாக முடித்து சென்னைக்கு ரயில் விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தரப்பு மக்களிடம் கையெழுத்துப் பெற்று ரயில்வே அமைச்சருக்கு அனுப்புவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.