திருப்பனந்தாள் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயக்கன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
பட்டுக்கோட்டையில்...
இதேபோல், பட்டுக்கோட் டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகர்-1, நகர்-2, நகரியம், பண்ணைவயல், சூரப்பள்ளம், சூரங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.