பெண்ணிடம் தங்க சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூரில் அண்மையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரில் அண்மையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா (53). இவர் தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் ஆயுதப்படை மைதானம் அருகே அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  இவரை மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் இவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com