தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க கூட்டம்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சாவூர் மாவட்டக் குழு கூட்டம் தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சாவூர் மாவட்டக் குழு கூட்டம் தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயாலாளர் சி. பக்கிரிசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீரை முறையாக திறந்து விட வேண்டும். இது தொடர்பாக வரும் 28 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டங்களிலும், பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்திலும் திரளான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் பி. குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com