பேராவூரணி ஒன்றிய பகுதியில் ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புனல்வாசல், திருச்சிற்றம்பலம், களத்தூர், தென்னங்குடி, திருப்ப

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புனல்வாசல், திருச்சிற்றம்பலம், களத்தூர், தென்னங்குடி, திருப்பூரணிக்காடு,  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட தென்னை, நெல், வாழை, குடிசைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, மக்களுக்கும், மீனவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
கட்சியின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மன்னை மு.அ. பாரதி, விவசாய சங்க மாவட்டச் செயலர் பா. பாலசுந்தரம், நிர்வாகிகள் இரா. திருஞானம், பி. காசிநாதன், கோ. பன்னீர்செல்வம், வி. ராசமாணிக்கம், டி. ரவி, மு. சித்திரவேல், ஆர். மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com