தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை மற்றும் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. மருதமுத்து தலைமை வகித்தார். ஸ்தாபனம் என்ற தலைப்பில் மாநிலப் பொதுச் செயலர் (பொ) வீ. அமிர்தலிங்கம், வன்கொடுமை தடுப்பு சட்டம்-2015 என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் எம்.சின்னத்துரை பேசினர். வி.தொ.ச. மாவட்டத் தலைவர் ஆர். வாசு, செயலர் கே. பக்கிரிசாமி, துணைச் செயலர்கள் கே. அபிமன்னன், ஏ. செல்வராஜ், துணைத் தலைவர் எம். சம்சுதீன், மாவட்டக் குழு கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.