பட்டுக்கோட்டையில் 152 பேருக்கு இலவச கண் பரிசோதனை

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் நியமனம் என்.என். நடராஜன் தனது தந்தை என்.நல்லையா வேளாளர் நினைவாக அளித்த நன்கொடையில், பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.
முகாமில் பங்கேற்ற 152 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 55 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் தலைமை வகித்தார். லாரல் பள்ளித்
தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் முகாமைத் தொடங்கி வைத்தார். மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கே. விவேகானந்தன், ஆர்.கே.பி. சந்திரசேகரன், ஏ.என். ராஜேந்திரன், பி. செல்வராஜ், ஆர். ஜெயவீரபாண்டியன், ஆர். அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com