பேராவூரணி நகர திமுக வார்டு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

பேராவூரணி பேரூர் கழக திமுக வார்டு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி பேரூர் கழக திமுக வார்டு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் கே.வீராச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ மகேஷ்கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொறுப்பாளர்களிடம் நிறை-குறைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் செயல்படாத வார்டு பொறுப்பாளர்களை மாற்றம் செய்வது, இறந்தவர்கள், வெளிநாடுகள் சென்றவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது, ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் பேராவூரணி நகர கிளையின் சார்பில் அதிகளவில் கலந்து கொள்வது, ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், நகரச் செயலாளர் கோ.நீலகண்டன் தலைமை கழக பேச்சாளர் அ.அப்துல்மஜீத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com