கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை 1008 செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், கோயிலில் 1008 செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.