பேராவூரணியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை கொடியேற்றும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்க மன்றத் தலைவர் பி.முல்லைவேந்தன் தலைமை வகித்தார். மன்றச் செயலாளர் ஆர்.அருள்முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.ஜே.பாலமுருகன் மன்றக் கொடியேற்றினார்.
இந்நிகழ்ச்சியில், அப்பகுதியினருக்கு வேட்டி, சேலை, குடங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மன்ற பொருளாளர் எம்.துரை கெளசிக், நிர்வாகிகள் கே.சுரேன், எஸ்.நகுலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.