ஒரத்தநாடு வட்டம், திருவோணம் பகுதியில் தோட்டத்தில் பதுக்கிய 300 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவோணம் அருகேயுள்ள மணிக்கிரான் விடுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவோணம் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர் மலர்மன்னன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பானை, அண்டா உள்ளிட்ட பொருள்கள் கிடந்தன. அங்கு போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் பிளாஸ்டிக் குடங்களில் 300 லிட்டர் சாராய ஊறல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, அங்கு சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த மணிகிரான்விடுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ராமன் (35), மாயக்கண்ணு மகன் செந்தில் (30), செவ்வாய்பட்டியை சேர்ந்த தங்கப்பா (56) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.