தஞ்சாவூர் அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே கூடலூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் (64) ஜன. 24-ம் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ஆர். ஜீவன்ராஜ் (24), ஜெ. ஜெயக்குமார் (33) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜீவன்ராஜ், ஜெயக்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் பரிந்துரைத்தார்.
இதையடுத்து, ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆணைப்படி ஜீவன்ராஜ், ஜெயக்குமாரை போலீஸார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர்.