கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கும்பகோணம் செட்டிமண்டபம் அருகே புறவழிச்சாலையில் போட்டியை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். செட்டிமண்டபத்திலிருந்து நான்கு சந்திப்பு சாலை, நீதிமன்றம், பாலக்கரை, உச்சிப்பிள்ளையார் கோயில் வழியாக  பழைய மீன்மார்க்கெட்டில் 5 கி.மீட்டருக்கு போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 1,500 பேர் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
வெற்றி பெற்ற இருபாலருக்கும் ரூ.23 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்டத் தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com