அக்.31-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் அக். 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் அக். 31-ம் தேதி நடைபெறவுள்ளது.
 தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நிலுவையிலுள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, குடும்ப பாதுகாப்பு நிதி விண்ணப்பங்கள், திருந்திய ஓய்வூதியங்கள், கூடுதல் ஓய்வூதியம் போன்ற தங்களது கோரிக்கைகளை தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம்" என தலைப்பிட்டு தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலுவலருக்கு அக். 26-க்குள் அனுப்பவேண்டும்.  கருவூல அலுவலரின் அதிகார வரம்புக் உட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறை தீர் கூட்டத்தின்போது உரிய ஆணைகள் வழங்கப்படும். மேலும், கூட்டத்தின்போது நாமினேசன் தாக்கல் செய்தல், திருந்திய ஓய்வூதிய விகிதங்களை ஓய்வூதிய புத்தகங்களில் பதிவுகள் மேற்கொள்ளுதல் போன்ற ஓய்வூதியம் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கூட்டத்தில் திருந்திய ஓய்வூதியத்திற்கான கணக்கீட்டுத் தாள்கள் வழங்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com