பட்டுக்கோட்டையில் 51 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

பட்டுக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப்புரட்சிப் பாசறை அமைப்பின்  சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட

பட்டுக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப்புரட்சிப் பாசறை அமைப்பின்  சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட  51 விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காசி விஸ்வநாதர் கோயில் எதிரிலுள்ள காசாங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. 
முன்னதாக, தஞ்சை தெற்கு மாவட்ட ஜெ. பேரவை தலைவர் எஸ்.கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற  விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறையின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.ஜி.மணிகண்டன் தொடங்கி வைத்தார். அவ்வமைப்பின் நிறுவனர்,தலைவர் ஆதி. மதனகோபால், மாநில இளைஞரணித் தலைவர் ஏ.எல். முருகேசன்,  பட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து, நகர வர்த்தக சங்க நிர்வாகி ஆர்.விஜயரெங்கன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com