கும்பகோணத்தில் தகைசார் ஆசிரியர் விருது வழங்கும் விழா

கும்பகோணம் தனியார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா, தகைசார் ஆசிரியர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் தனியார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா, தகைசார் ஆசிரியர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாணவி வேம்பு வரவேற்றார். கல்லுôரி செயலாளர் மாலினி விஜயகுமார் தொடக்கவுரை நிகழ்த்தினார். முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் அன்பழகன், குடவாசல் வட்டார கல்வி அலுவலர் பாப்பம்மாள் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு தகைசார் ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி கெளரவித்தனர். நிறைவில் பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com